Tuesday, June 28, 2011

அன்பு


அன்பு
by Sita Lakshmi

அன்பைக் கொடுத்துதான் அன்பைப் பெற வேண்டும்.ஆனால்,வெறுப்பைக் கொடுத்து அன்பை எதிர்பார்க்கிறோம்.
அன்பைப் பற்றி பேச ஒரு வார்த்தை போதும்.ஆனால் அன்போடு வாழ ஒரு வாழ்கையே வேண்டும்...
அன்பின் ஒரே எதிரி கோபம்தான்.கோபத்தின் ஒரே நண்பன் வெறுப்பு.வெறுப்பின் காரணம் எதிர்பார்ப்பு.
எதிர்பார்த்தது நடக்கவில்லை எனில் வெறுப்பு வருகிறது.கோபமும் கூடவே வந்துவிடும்..கோபம் வந்தால் அன்பு பறந்தோடி விடும்..
எதையும் யாரிடமும் எதிர் பார்க்க வேண்டாம்..வருவதை ஏற்றுக்கொள்வோம்...வாழ்க வளமுடன்
அன்பான மனிதராக வாழ்வதற்கு
நம் மனதில் பிறரைப் பற்றிய அன்பான வார்த்தைகள், கருத்துகள்.
அவர்களிடம் இருக்கும் நல்ல குணங்கள்.இவற்றை பதிய வைக்க வேண்டும்.பிறரைப் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை மனதில் வைத்துக்கொண்டு,வெளியில் அன்பு காட்ட முனைந்தால் அது வெறும் நடிபாகத்தான் இருக்கும்.
பிறரது பிரச்சினைகளை நம் பிரச்சினைகள் போல எடுத்துகொண்டுஆறுதல் கூறுவது, பிரச்சினைகள் தீர வழி காண்பது, அவர்களுக்காக சங்கல்பிப்பது, இறைவனை வேண்டுவது, முடிந்த உதவிகளை செய்து  வாழ்வது, பிறர் தவறை  ஏற்றுக் கொள்வது, பொறுத்துக்கொள்வது, சகித்துக்  கொள்வது. இவை அன்பான மனிதரின் அடையாளங்கள்

For More Info :
Email
  • vinborntowin@skygroups.orgh
  • vinborntowin@yahoo.com

Facebook

No comments:

Post a Comment