Sunday, May 8, 2011

"சார்...மனித வாழ்வின் நோக்கம் என்ன?"

கடவுளை நம்பியும் பார்த்திட்டோம், திட்டியும் பார்த்துட்டோம், - காசையும் பார்த்துட்டோம், கஷ்டத்தையும் பார்த்துட்டோம்,,ஆனாலும் வாழ்க்கைல ஒன்னு குறையுது... வாழ்க்கைனா என்ன.. வாழ்கையின் நோக்கம் என்ன ? 

ஜே கிருஷ்ணமூர்த்தியுடன் சில இளைஞர்கள் உரையாடுகிறார்கள்,,, தயவு செய்து கவனமாக படிக்கவும் ( அடைப்பு குறியில் நம்ம விளக்கம் ..பிடிக்கவில்ல்லை என்றால், எடுத்து விடுகிறேன் ) 


******************************************************

" சார்.. சுத்தி வளைக்காம கேட்குறேன். எங்க கேள்வி ரொம்ப எளிமையானது..எளிமையா ஒரு பதில் சொல்லுங்க... மனித வாழ்வின் நோக்கம் என்ன? " ( பிறக்க்றோம்.. சாபிட்றோம்..தூங்குறோம்..லவ் பண்றோம்... சண்டை போடறோம், குழந்தை பெத்துகுறோம் .. .. இயக்கம் ,கட்சி, இதேல சேர்ர்ந்து பாக்குறோம்..கடவுளை நம்புறோம்... கடவுளை நம்ப மறுக்குறோம்..அனாலும் என்ன ..கடைசியில் ஒரு நாள் சாகுறோம்

என்ன வாழ்கை இது? வாழ்வின் நோக்க்கம்தான் என்ன ?) 

இதை ஏன் கேட்குறீங்க? யாரவது இதுதான் வாழ்வின் நோக்கம் னு சொன்னால் அதை அப்படியே எத்துக்க்டு, அதுக்கு தகுந்த மாதிரி வாழ்வை அமைச்சுக்கலாம்.. அப்படிதானே ? "

" இதை ஏன் கேட்குரோம்னா , நாங்க ரொம்ப குழம்பி பொய் இருக்கோம்... யாரவது ஒருவர் கிட்ட இடஹி பத்தி பேசணும்னு தோனுச்சு... சில பேரு எல்லாம் தெரிஞ்ச மாதிரியும், எங்களுக்கு ஒன்னும் தெரியாத மாதிர்யும் , அறிவுரை குடுக்றாங்க,,, இதெல்லாம் வேளைக்கு ஆகாது.. சாதரணமா பேசும் ஒருத்தர் கிட்ட பேசணும் னு தோனுச்சு... அதான் உங்க கிட்ட கேட்குறோம்.. "

" அர்த்தமுள்ள வாழ்வு வாழ ஆசை படறோம்..அதே சமயம் , எதாவது கட்சி, இயக்கம், ஆன்மிகம் , கடவுள் இதெல்லாம் ஒரே மாதிரித்தான் இருக்கு... இங்கே வந்த்டோம்.. நீங்க என்ன சொல்ல போறீங்க ?"

சரி.. யாரவது ஒருவர் இதுதான் வாழ்வின் நோக்கம் னு , உங்களுக்கு பிடிக்ற மாதிரி சொல்லிட்டா எதுக்கேவீங்களா ?

" ஆமா .. அது உண்மை னு தோணுச்சுனா , எதுக்குவோம் "

அப்படியா?

"ஆனா, வந்து... இதை புரிஞ்சுக்ற தகுதி எங்களுக்கு இருக்கணு தெரியல" 

அதுதான் விஷயம்... எல்லோரும் குழப்பத்துல இருக்றதா சொன்னீங்க... மனசு குழப்பமா இருந்தா, அதை வைச்சு , இது போன்ற பெரிய விஷயங்களை புரிந்து கொள்ள முடியுமா 

" ஏன் முடியாது.. ஆமா.. நாங்க குழம்பி போய் இருக்கோம்... மறுக்கல..ஆனா, குழம்பி போனவன் ஒன்னும் கத்துக்க முடியாதுனு சொன்னா, நாங்க என்னதான் பண்றது... "

என்னதான் முயன்றாலும், குழபத்தோட ஒரு கேள்வியை அணுகினால், விடையும் குழபமாகத்தானே கிடைக்கும் ?

" என்ன தான் சார் சொல்ல வர்றீங்க ? "

எந்த முடிவையும் வற்புறுத்த, நாம இப்ப பேசல.. ஒன்னு ஒன்ன , நிதானமா விவாதிப்போம்... மனசு குழப்பமா , தெளிவில்லாம இருந்தா, அதை வச்சு தெளிவா சிந்திக்க முடியுமா ? இதை முதலில் கண்டு பிடிப்போம்... 

" உண்மைதான் சார்.. தெளிவில்லாத மனதின் சிந்தனையும் தெளிவு இல்லாமல்தான் இருக்கும்''

தெளிவிலல்ல்லாத ஒரு மனம் ஒரு குருவை தேடினால், கிடைக்கும குரு அதற்கேற்பத்தானே இருப்பார் ( மனதில் ஆயிரம் ஆசைகளை வைத்து கொண்டு தேடினால், நித்யானந்தா, ஓஷோ , பிரேமானந்த போன்றவர்கள்தானே கிடைப்பார்கள் !! ) .. தலைவர்களும் அப்படித்தான் இருப்பார்கள் ( ஒரு முட்டாள் தலைவனை தேர்ந்தெடுத்தால், அந்த முடிவு முட்டாள்தனமாகத்தான் இருக்கும் )

" இதை ஒத்துகொள்ள கஷ்டமா இருக்கு "

உண்மைதான்,என்ன, நாம் எல்லோரும் நம்மை புத்திசாலிகள், உலக பிரச்சினையை தீர்க்க நம்ம கிட்ட தேர்வு இருக்கு... நாம் நல்லாத்தான் இருக்கோம்..உலகம் தான், என்ன செய்யனும்னு தெரியாம இருக்கு னு நினைக்றோம்.. நம்ம கிட்ட என்ன தவறு இருக்குனு யாரும் பார்ப்பது இல்ல 

" எத்தனையோ பேரு பேசி கேட்டு இருக்கேன்... நீங்க சொல்றதுதான் கரக்ட் னு தோணுது "

தெளிவு இல்லாதவர்கள் தான் இப்படி சொல்வார்கள் 

" என்ன சார், இப்படி சொல்லீடீங்க..பல கருத்துக்களை கேட்டு, அதில் சிறந்ததை தேர்ந்து எடுத்தால்தானே தெளிவு பிறக்கும் "

உங்கள்ளுக்கு தெளிவு இருந்துசுனா , இப்படி தேர்ந்தெடுக்க மாட்டீர்கள் 

" ஆஹ.. உங்க பாயிண்ட் புரியுது .. சார் என்ன சொல்றார்னா, நீ ஒரு பொண்ண உண்மையில் லவ் செஞ்சா, எந்த குழப்பமும் இல்லாம அவளை கல்யாணம் செஞ்சுக்குவ... தேர்ந்தெடுப்பு என்ற கேள்வியே இல்லை.. நீதான் தெளிவா இருக்கியே... காதல் என்பது இல்லைனாத்தான், யாரை கல்யாணம் பண்ணலாம், நம்ம கடஹ்ல் தப்ப அப்படீன்னு ஆயிரம் கேள்வி... ஒரு வகைல, தெளிவுக்கு இன்னொரு பெயர் காதல்.. என்ன்ன நான் சொல்றது? "

" காதல் னு நீங்க எதை சொல்றீங்க னு தெரியல.. அதை பத்தி இப்ப பேச வேண்டாம்.. நீங்க இங்கே வரும்போது, வாழ்கையின் நோக்கம் என்ன அப்படீன்னு ஒரு விஷயத்தை ஷாப்பிங் செய்ய வந்தீங்க .. இல்லியா... இதே போல பலர் கிட்ட கேட்டு இருப்பீங்க,,, அந்த பதில்கள் உங்களுக்கு திருப்தி தரல.. ஒரு கடைல பொருள் பிடிக்கலேன்னா அடுத்த கடிக்கு போற மாதிரி, இன்னொரு கருத்தை வாங்க வந்து இருக்கீன் ங்க.. உங்களுக்கு குழப்பம்.. அதுனாலதான், எதாவது ஒன்னை உறுதியா பிடிச்சுக்க விரும்புறீங்க.. 
( சிலர் ஆன்மிக வாதிகளை பிடிக்கலாம். சிலர் கட்சிகளை, எதாவது தொழிலை, வலை பதிவை கூட பிடித்து கொண்டு இதுதான் வாழ்வின் லட்சியம் என சொல்லலாம் ) 

" உங்க பாயிண்ட் புரியுது சார் "

பொறுமையா இன்னும் பாப்போம்.. நம்ம மனம் குழப்பமா இருக்கு,,, சின்னத்தனமா சிந்திகுது..அற்பமா இருக்கு..இல்லையா 

" அப்படி சொல்ல முடியாது... மனதின் ஒரு பகுதி மிருகமா இருந்தாலும், இன்னொரு பகுதி நல்ல தன்மைகள் நிரம்பி இருக்கு... மிருகம் என்ற கெட்ட பகுதியை நாம் வெல்ல முடியும் "

அப்படித்தான் நம்புறோம்.. ஆன்மானு ஒன்னு இருக்கு... நன்மை தீமைகள் அதை பாதிக்காது.... வெளி மனம், உள்மனம் என்றெல்லாம் இருக்கு அப்படீல்லாம் நினைக்றோம்.. இப்படி சொல்லி கொடுத்து இருக்காங்க... இது எல்லாமே முட்டாள் மனதின் சிந்தனைகள்தான் ..

" அப்ப நாங்க என்னதான் செய்யனும் "

அவசர படாதீங்க... இதுதான் செய்யணும் னு எந்த அவசியமும் இல்லாமல் கூட இருக்கலாம்... எல்லாவற்றையும் சரியாக புரிந்து கொண்டால், உங்கள் நடவடிக்கையே வேறு மாதிரி இருக்க கூடும் 

" வாழ்வை சரியாக புரிந்து கொண்ட்டல், என்ன செய்யனனும்னு அதுவே சொல்லி தரும் னு சொல்றீங்க... சரி,,, வாழ்க்கைனா என்ன ?"

அழகு, துன்பம் குழப்பம், , மரம், அதோ அங்கு பறக்கும் பறவை, சுட்டு எரிக்கும் சூரியன், குளிர்மிகு நிலவு என எல்லாமே வாழ்க்கைதான்,,, ஒரு தெளிவற்ற மனம் வாழ்வை எப்படி அனுகிகிறது என்பதுதான் முக்கியம்,, வாழ்வை பற்றிய விள்ளக்ன்கள் அல்ல..

" வாழ்வில் நாம் சந்திக்கும் குழப்பங்கள் துயரங்கள் எல்லாம் மனதின் பிரதிபலிப்பு என புரியுது.. வாழ்வு என்பதில் இருந்து விலகி நின்று பார்த்தல் தான் தெளிவு பிறக்கும் னு தோணுது... எப்படி விலகி நின்று பார்ப்பது "

உண்மையை சொல்லனும்னா, நீங்க வாழ்கை என்பதை விட்டு விலகி தான் இருக்கீங்க,,, குப்பன் அப்படீங்கற நீங்க மாறாத, சிறப்பான ஒன்று போலவும், மற்ற எல்லாம் திருந்த வேண்டும் மாற வேண்டும் எபது போலவும் நினைகிறீங்க... மற்ற எல்லாவற்றையும் பார்க்கும் ஒரு சாட்சியாக, பார்வையாளனாக உங்களை நினைத்து கொள்கிறீகள்... (நீங்கள் வேறு - மற்ற எல்லாம் வேறு )..இப்படி தனியாக இருக்கும் நீங்கள், முழுமையை எப்படி புரிந்து கொள்வீர்கல் ?

" என்னை பத்தியே எனக்கு புரியல..உலகத்தை பத்தி புரிஞ்சுக்க முயற்சி பண்றேன்..ஹ்ம்ம் "

ஒரு முட்டாள் கண்டுபிக்கும் கடவ்ளும் முட்டாளாகத்தான் இருக்க முடியும் ... மனதை செம்மை படுத்தாமல், கடவுள் இரிகிரார இல்லையா.. உண்மைன என்ன , நல்ல அரசாங்கம்ன என்ன . இப்படியெல்லாம் கேட்டுகிட்டு இருக்கோம் 

" ஆமா சார்.. கேட்க கஷ்டாமா இருந்தாலும், உண்மையை உணர முடியுது.. என்னதான் செய்றது "

கொஞ்சம் கொஞ்சமா மாறலாம்னு நினைக்காம, இப்பவே - இந்த கணமே எல்லாத்தையும் தூக்கி எறிங்க... மனம் என்கிற குப்பை தொட்டில சேர்த்து வைத்து இருக்ற அணைத்து குப்பைகளையும் காலி செய்யுங்க... இதுவரை நீங்க அறிந்து வைத்துள்ள எல்லாம், புதிதாக அறிவதை தடை செய்கிறது 

" சரி ..எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டா எனக்கு என்ன கிடைக்கும் "

நல்லா கேட்டீங்க போங்க... எதாச்சும் கிடைத்தால்தான் , துறப்பேன் என சொல்வது உண்மையில் துரத்தல் அல்ல... அது ஒரு வியாபாரம்தான்.. எல்லாவற்றையும் விட்டு விட்டால் என்ன கிடைக்கும் என ஒரு முட்டாள் மனது யோசித்தால், முட்டாள்தனமான விடைகள் தான் கிடைக்கும் ...( கடவுள் தெரிவார், பேரமைதி கிடைக்கும், ஆன்மிக ஆற்றல் கிடைக்கும் )....
அறிவு என்பதே கற்பிதம்தான்,,,, பழமைதான்... அறிந்ததில் இருந்து விடுதலை ஆனால்தான், இதுவரை அறியாததை காண முடியும் 

" யோசிக்காம அப்படி கேட்டுட்டேன்... எங்களக்கு பிடிச்ச மாதிரி பேசி, எங்களை சாமாதான படுத்தும் வகையில் மேலோட்டமா பேசல.. நன்றி .... சார், நீங்க சொன்னதின் உண்மையை அறிவு பூர்வமா இல்லாம , இதய பூரவமா உணர முடியுது... உண்மையை உணர்ந்து விட்டால், அதற்கு பிறகு என்ன செய்வது என்ற கேள்வி இல்லை..என்ன செய்வது என்பதை அந்த உணர்வே தீர்மானிக்கும்... அந்த உணர்வுதான் முக்கியம்... சார், உங்களை பார்க்க இன்னொரு முறை வரலாமா ? "

No comments:

Post a Comment